எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

பிலிப் யான்சிகட்டுரைகள்

பயமில்லை

வேதாகமத்தில்,தேவதூதன் தோன்றும் ஒவ்வொரு சமயத்திலும் அவன் பயன்படுத்தும் முதல் வார்த்தைகள் “பயப்படாதிருங்கள்” (தானியேல் 10:12–19; மத்தேயு 28:5; வெளிப்படுத்தல் 1:17). இது ஆச்சரியமாக உள்ளது. இந்த தேவதூதர்கள் பூமியிலுள்ள மனிதர்களோடு தொடர்பு கொள்ளும் பொழுது, தூதர்கள் கூறுவதைக் கேட்கும் மனிதர்கள் பொதுவாக பயத்தினால் உணர்வற்றவர்களாய் முகங்குப்புற விழுகிறார்கள். ஆனால் தேவன் மனிதர்களை பயப்படுத்தாத முறையில் பூமிக்கு வந்ததை லூக்கா கூறுகிறார். மனிதர்களாகிய நாம் பயப்படாமல் இருக்கத்தக்கதாக, தேவாதி தேவன் இயேசு பாலகனாக சத்திரத்தின் முன்னணையில் பிறந்தார். புதிதாகப் பிறந்த பச்சிளங்குழந்தை பய உணர்வை உண்டாக்குமா?…

விசுவாசத்தைக் காத்துக்கொள்ளுதல்

விசுவாசத்தை ஓர் மந்திர சூத்திரமாகக் கருதுவது ஓர் சோதனையாக இருக்கிறது. இதிலே நாம் வளர்ந்து பெருகினால் நாம் ஐசுவரியவான்களாகவும், ஆரோக்கியமுள்ளவர்களாகவும், எல்லா ஜெபத்திற்கும் பதில் பெற்றுக்கொண்டவர்களாய் திருப்திகரமான ஓர் வாழ்க்கை வாழுவோம். ஆனால், எப்பொழுதுமே வாழ்க்கை நேர்த்தியான ஓர் சூத்திரமாக அமையாது. அதற்கு சாட்சியாக எபிரெய நிரூபத்தின் ஆக்கியோன் எபிரெயர் 11ம் அதிகாரத்தில் அனைவரையும் உலுக்கும் வகையில் பழைய ஏற்பாட்டில் “உண்மை விசுவாசத்தை” வெளிப்படுத்தும் வகையில் விசுவாச வீரர்களின் பட்டியலைக் கொடுத்திருக்கிறார்.

“விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்” என்று (எபி. 11:6)ல் ஆணித்தரமாகக் கூறியிருக்கிறார்.…

பாதுகாப்பு வலை

மத்தேயு 5–7ல் காணப்படும் மலைப்பிரசங்கம் யாரும் செயல்படுத்த முடியாத மனிதனின் நடத்தையை அளவிடும் ஓர் அளவுகோல் என அநேக ஆண்டுகளாக நான் கருதினேன். எப்படி நான் அதன் உண்மையான அர்த்தத்தைக் காணத் தவறினேன்? நம்மை சோர்வுக்குள்ளாக்க அல்ல, ஆனால் தேவன் எப்படிப்பட்டவர் என்று கூறவே இயேசு இவ்வசனங்களைப் பிரசங்கித்தார்.

நாம் நம் சத்துருக்களை ஏன் நேசிக்க வேண்டும்? ஏனென்றால் நமது இரக்கமுள்ள பிதா தமது சூரியனை நல்லோர் மேலும், பொல்லாதோர் மேலும் உதிக்கச் செய்கிறார். பரலோகத்தில் ஏன் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டும்? ஏனென்றால்,…

ஈஸ்டர் ஆரம்பம்

ஈஸ்டர் பற்றிய கதையில் ஒரு குறிப்பு எப்பொழுதும் என் ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கிறது. சிலுவையில் அறையப்பட்டதினால் ஏற்பட்ட தழும்புகளை இயேசு ஏன் வைத்திருந்தார்? உயிர்த்தெழுந்த பின் அவர் விரும்பிய எந்தவிதமான சரீரத்தையும் அவர் உடையவராக இருந்திருக்கலாம். எளிதில் யாவரும் அடையாளம் கண்டு கொள்வதற்காக அவர் தழும்புகளுள்ள சரீரத்தைக் தெரிந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். ஏன் அப்படி?

இயேசுவுடைய கைகளில் கால்களில் அவருடைய விலாவில் ஏற்பட்ட காயங்களின் தழும்புகள் இல்லாவிட்டால், ஈஸ்டரைப் பற்றிய விவரங்கள் முழுமை பெற்றவைகளாக இருக்க இயலாது (யோவான் 20:27). மனிதர்கள் முத்துப் போன்ற…

அமர்ந்திரு

சில வருடங்களுக்கு முன்னர் எனக்கு வரும் கடிதங்களுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் கொடுப்பேன். இவ்வாறு கடிதத் தொடர்பு இனிதே நடந்து வந்தது. பின் ஃபாக்ஸ் இயந்திரம் வந்ததால் பதில் இரண்டு நாட்களுக்குள் வந்துவிடும். அதுவும் மகிழ்ச்சியாகவே காணப்பட்டது. இன்று மின்னஞ்சல், குறுஞ்செய்தி (SMS), கைபேசி போன்றவற்றால் பதில் அதே நாளில் எதிர்பார்க்கப்படுகிறது!

“அமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்து கொள்ளுங்கள்.” சங்கீதம் 46ல் காணப்படும் நாம் நன்கு அறிந்த இந்த வசனத்தில் ஒர் முக்கியத்துவத்தை உடைய இரண்டு கட்டளைகளை நான் வாசித்தேன். முதலாவது நாம் அமர்ந்திருக்க…

மேல்நிலையிலிருந்து

ஓர் உயர்ந்த மலையின் நிழலில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் ஓடும் ஓடையின் ஓரத்தில் என் வீடு உள்ளது. வசந்தகாலங்களில் பனி உருகுவதாலும் இந்த கனமழை பெய்வதாலும் ஒடையில் நீர்வரத்து பெருகி நதியைப் போல காட்சியளிக்கும். அநேகர் அதில் மூழ்கியும் போயிருக்கிறார்கள். ஒரு நாள் இந்த ஒடையின் துவக்கத்தை கண்டறிய விரும்பி ஆராய்ந்த பொழுது, அது ஒரு மலையின் மேலுள்ள பரந்து விரிந்த பனிநிலங்களில் இருந்து துவங்குகிறது என கண்டறிந்தேன். இந்த பனி நிலங்களிலிருந்து பனி உருகி, நீண்ட பயணமாய் அநேக சிற்றோடைகளோடு இணைந்து, பின்பு…

முதல் அடி

ஒரு நாள் எனது சிநேகிதி என்னை வழியில் நிறுத்தி அவளது அண்ணனுடைய ஒரு வயது குழந்தை நடப்பதற்காக எடுத்து வைத்த முதல் அடியைப் பற்றி மிகுந்த ஆர்வத்துடன் பகிர்ந்து கொண்டாள். அவனால் நடக்க முடிகிறதென்று ஆச்சரியத்துடன் கூறினாள். அதை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவருக்கு எங்களுடைய வார்த்தைகள் எவ்வளவு வினோதமாக இருந்திருக்குமென்று பின் நாட்களில் எண்ணிப் பார்த்தேன் உலகிலுள்ள அநேக மக்களுக்கு நடக்க இயலும் அது என்ன பெரிய காரியம்?.

குழந்தைப் பருவம் சிறப்புத் தன்மைகளை உடையதாகவுள்ளது. ஆனால் அத்தன்மைகள் வாழ்க்கையின் பின் பகுதியில்…